Wednesday, 23 May 2018

M (A) Y மனசு


சிரித்து கொள்கிறேன்
சிறு வயதில்
அனைத்துக்கும்
அழுதிருந்ததை
நினைத்து
***
நினைத்தபடியே
இருக்கிறேன்
மறப்பது
எப்படியென்று
*****
எப்படியாவது
இறந்து போகலாம்
என நினைக்கும் போதெல்லாம்
பிறந்து விடுகிறேன்
எதையாவது
ரசித்து
*********
ரசித்தபடியே
இருப்பது தான்
வெறுப்பாய்
இருக்கிறது
**************
இருக்கிறது
ஓா் இமய  கனா ,
இறவா  வரிகளை  
எழுதி விட வேண்டும்
இறந்தாலும்  
வாழ்ந்திருக்க 
*****************************


Saturday, 12 May 2018

நந்தவனமும் நானும்




















என் வருகைக்காய்
நகம் கடித்து காத்திருந்திருக்குமோ
என் நந்தவனம்.
நிலமெல்லாம்
நிறைந்திருக்கின்றன சருகுகள்.

நலம் விசாாித்த அடுத்த நொடியே
நம்பிக்கையாய் கேட்கிறது
நாளையும் வருவாய் தானே என்று

கான்கீாீிட் காடுகளை
அடிக்கடி கடப்பது,
அவ்வளவு
 எளிதல்ல என்பதை
 நான்
 எப்படி  சொல்வேன்
 என் நந்தவனமே