Tuesday, 1 November 2011

நான்



சுயம் தொலைத்தல்
சுவாசித்தல் பொருட்டு என்றால்
உயிரிருந்தும்
சவமாய் வாழ்தல் சமம்.

சவமல்ல 
நான்
சத்ரியன் 

சமர் செய்வேன்
சுயம் காக்க
பயமில்லை.

என் 
வழித்தடங்கள்
ஒளிவட்டம் மட்டும்
நோக்கி.

அன்றாட போரில்
அடையாளம்  காத்து
ஆசுவாசபடுத்தி
கொள்ளும் போதெல்லாம்
சற்று ஆணவத்துடன் தான்
சொல்லி கொள்கிறேன்,

சராசரி மனிதனல்ல நான்,
சராசரிக்கும் சற்று மேல் என்று.

No comments:

Post a Comment

Leave your comments