Friday, 19 August 2016

வாழ்வில் தொலைந்தவன்

கடைசி ஞாயிறு
கடவுள்  அலுவலகம் சென்றிருந்தேன்

இறைந்து கிடந்தது
எங்கும்
இறந்தவர் , இறக்கப்போகிறவர் பட்டியல்

ஏமாந்தேன் தேடி
இரண்டிலும் இல்லை என்  பெயர்

சாகாவரம் பெற்றவனா நான்
சத்தமாய் கேட்டேன் கடவுளிடம்

கண்ணை மூடியபடி இருந்த கடவுள்
என்   காதில் சொன்னார்

பிறக்கவே இல்லை நீ இன்னும்

No comments:

Post a Comment

Leave your comments