கடைசி ஞாயிறு
கடவுள் அலுவலகம் சென்றிருந்தேன்
இறைந்து கிடந்தது
எங்கும்
இறந்தவர் , இறக்கப்போகிறவர் பட்டியல்
ஏமாந்தேன் தேடி
இரண்டிலும் இல்லை என் பெயர்
சாகாவரம் பெற்றவனா நான்
சத்தமாய் கேட்டேன் கடவுளிடம்
கண்ணை மூடியபடி இருந்த கடவுள்
என் காதில் சொன்னார்
பிறக்கவே இல்லை நீ இன்னும்
No comments:
Post a Comment
Leave your comments