Wednesday, 22 November 2017

ஒரு கடவுள் மறுப்பாளனின் கடைசி கவிதை ..........











அற்புதம் ஏதும் நிகழாமலே
அனேகரது
ஆயுள் முடிந்து போகிறது

 இயலாமை அறிந்தும்
இன்னும் ஆண்டவன்
அற்புதம் நிகழப்பண்ணுவேன் என
அரற்றிக்கொண்டேயிருக்கிறான்

அடங்காது ஆன்மீகம் .......

விடாது கருப்பு .............

Wednesday, 1 November 2017

#மழைக்காலம்#




குதுாகலத்தில்,
பள்ளி குழந்தைகளும்...
பரணியில் கிடந்த குடைகளும்........

#மழைக்காலம்#
---------------------------

மறுகி நடக்கும் மான்கள் போல்
மழை கோட்டணிந்த மழலைகள்.....

#மழைக்காலம்#
--------------------------------

தேவ தூதர்கள்தான்
மழை நேர தேநீர் சேவை
மறுக்காமல் செய்பவர் எல்லாம்

#மழைக்காலம்#
 ----------------------------

அரசு எந்திரத்தை அர்சிக்க
ஆண்டுக்கொருமுறை
அனைவர்க்கும் அமையும் சந்தர்ப்பம்......

#மழைக்காலம்#
----------------------------------------

மறைத்த, மறந்த, ஏதேனும்
ஓர் நிகழ்வை
நிச்சயமாய் நினைக்கலாம்
மழைக்கால மனசு .....

#மழைக்காலம்#
----------------------------------