Sunday, 7 February 2010

ஜீவகாருண்யம்



அரு  பட்டு  அடங்கும்
ஆட்டு குட்டிகளை
அதி  காலையிலே
கசாப்பு கடைக்கு போன காரணத்தால்
காண நேர்ந்தது

மனசு வலிக்க, மாமிசம் மறுத்து
வீடு திரும்பினேன்,

அடுத்த வாரமாவது ,
அறுத்த பின்னே சென்று
அசைவம் வாங்க வேண்டுமென்று.

No comments:

Post a Comment

Leave your comments