Tuesday, 24 March 2009

உனக்கு மட்டும்












எழுதியது எதையோ என்றால்
எறிந்து விட்டு போவாய்

உன்னையே ரதி என்றால்
உட்கார்ந்து பேசுவாய்

என் வார்த்தைகள் கூட
வழி மாற நீ விரும்ப மாட்டாய்

காதலி என்றே காத்திருப்பாயா
காலம் முழுதும்

என் வாசலுக்கு வந்து போ
மனைவி என்ற மகுடம்
சூட்டிக்கொள்.

விரல் நொடிய வீதி முழுதும்
கோலமிடு .
பாதம் கொண்டு
படி தொட்டு மனையாளு
அடுப்படியில் புகுந்து
ஆர்பாட்டம் செய்

யார் உன்னை தடுப்பது
ஆசிகளுக்கு அவசியமில்லை
ஆண்டுகொள்

உன் வீடு உன் வசம்

இது
இந்த காதல் கவிஞனின்
கடைசி தீர்வு 

No comments:

Post a Comment

Leave your comments