வேஷம்
மெல்ல சுருங்கும்
வாழ்க்கை .
அலை, கூட்டம்
புரளி , புழுதி என
புரியாது போகும் .
பேருந்து, பேரிரைச்சல்,
நகர சந்தடியே
நம்மை சுற்றி .
பக்கம் , எதிரில்
அருகில் என
அனைவருமே
அழகிய முகம்
மறைத்து
போலியாய்
ஓர் முகத்தில்.
இறுதி வரை
இருக்க
நாட்பொழுதும்
வேஷத்தரிப்பு.
துரத்தி , கலைத்து
கதவை மூடி
கண்ணுறங்கிபோவோம்
கலைத்துபோட அல்ல
மற்றொருபொழுது
வேஷம் கட்ட .
No comments:
Post a Comment
Leave your comments