Tuesday, 24 March 2009

வேஷம்















மெல்ல சுருங்கும்
வாழ்க்கை .
அலை, கூட்டம்
புரளி , புழுதி என
புரியாது போகும் .

பேருந்து, பேரிரைச்சல்,
நகர சந்தடியே
நம்மை சுற்றி .

பக்கம் , எதிரில்
அருகில் என
அனைவருமே
அழகிய முகம்
மறைத்து
போலியாய்
ஓர் முகத்தில்.

இறுதி வரை
இருக்க
நாட்பொழுதும்
வேஷத்தரிப்பு.

துரத்தி , கலைத்து
கதவை மூடி
கண்ணுறங்கிபோவோம்
கலைத்துபோட அல்ல
மற்றொருபொழு
து

வேஷம் கட்ட .

No comments:

Post a Comment

Leave your comments