
ஆதி குடியடா நாங்கள்
எம் அடையாளம்
அழிப்பீரோ நீங்கள் !
எத்தனை செய்வீர் வழி , எமை அழிக்க
அத்தனை உடைத்தெழுவோம்
எம்மினம் செழிக்க
புரிந்ததா
சீண்டியது தவறென்று
உணர்ந்தீரா
நாங்கள் வீரத்தின் உருவென்று
தோற்றது உங்கள் வீண் வாதம்
வீழ்வது நாமாயினும் ,
வாழ்வது தமிழாகட்டும்
இதுவே எங்கள் வேதம்
உயிர் கொடுத்தேனும்
காப்போம் பண்பாடு
இனியும் எம்மிடம் மோதுவது உம் பாடு
தாழ் பணியுங்கள் ,
தணியலாம் எம் சினம்
நாங்கள்
சூழ்பகை எரிக்கும்
சுடர் மிகு தமிழினம்
No comments:
Post a Comment
Leave your comments