Tuesday, 14 February 2017

சொல்லிப்போ










மழை நேர மண் வாசம்  போல
மனசுக்குள் நீ வந்தாய்   மெல்ல
ஏதோதோ செய்தாய்  நெஞ்சை  கிள்ள
ஐயோ வேறென்ன நான்  இங்கு சொல்ல

 சொல்லிப்போ   ...போ ... போ .... 
 உன்  காதலை
 .
ஏதேனும்  சொல்வாயா  கண்ணே
இன்றேனும் வருவாயா பெண்ணே
உன் மௌனங்கள் ஆயுளை  கொல்ல
சாகிறேன் நான் இங்கு மெல்ல

சொல்லிப்போ ...போ ...போ 
உன்  காதலை

காற்று வெளியிடையில்  அன்பே
உனக்காய் காத்திருக்கிறேன்  உயிரே
வந்தங்கு இறங்கு வசந்தமே
வானெங்கும் நம் காதல் சுகந்தமே

சொல்லிப்போ ...போ ...போ 
உன்  காதலை

No comments:

Post a Comment

Leave your comments