Friday, 7 April 2017

கனா















என் இரவுகளை
கனவுகளே
கடத்தி போகின்றன
எந்நாளும்

கனக்கின்றன கனவுகள்
உறக்கமில்லா  இரவுகளில்  கூட

உறங்குவது போல்
கண்டதேயில்லை கனா
இது வரை நான்

எந்த கனவையும்   மீண்டும்
கண்டதில்லை ஒருபோதும்  நான்

பலித்த கனவுகளாய்  பட்டியல்
ஒன்று இல்லையென்றாலும்
கனவு பலன்கள்
ஆராயாது  ஆரம்பிப்பதில்லை
என் 
அடுத்த நாள் காலை

அதோ
என்  உறக்கத்தை   களவாட
படுக்கையில்
காத்து கிடக்கின்றன
கணக்கில் அடங்க
கனவுகள்

எதிர்ப்பேதும் செய்யாமல்
நிராயுதபாணியாய்
நித்திரைக்கு போகிறேன்
நேற்றை போலவே


No comments:

Post a Comment

Leave your comments