எழுதியது எதையோ என்றால்
எறிந்து விட்டு போவாய்
உன்னையே ரதி என்றால்
உட்கார்ந்து பேசுவாய்
என் வார்த்தைகள் கூட
வழி மாற நீ விரும்ப மாட்டாய்
காதலி என்றே காத்திருப்பாயா
காலம் முழுதும்
என் வாசலுக்கு வந்து போ
மனைவி என்ற மகுடம்
சூட்டிக்கொள்.
விரல் நொடிய வீதி முழுதும்
கோலமிடு .
பாதம் கொண்டு
படி தொட்டு மனையாளு
அடுப்படியில் புகுந்து
ஆர்பாட்டம் செய்
யார் உன்னை தடுப்பது
ஆசிகளுக்கு அவசியமில்லை
ஆண்டுகொள்
உன் வீடு உன் வசம்
இது
இந்த காதல் கவிஞனின்
கடைசி தீர்வு