"என்னிடம் எதை நீ
அதிகம் ரசிக்கிறாய்"
ரகசியமாய் நீ கேட்ட
கேள்விக்கு ,
சொன்னால் கோபிப்பாய்
என்ற என் பதில் கேட்டு,
"என்ன அது" - என்று
நீ
செல்லமாய் சிணுங்கி
தவித்ததை
ரகசியமாய் ரசிக்க
ஆரம்பித்தேன்.
********************
நான் ரசிக்கும்படி
ஏதாவது எழுதித்தாயேன்
என கொஞ்சினாய்
தயங்காது எழுதி
தந்தேன் என் பெயரை.
நீ அதை ரசித்து வாசிப்பதை
ரகசியமாய் ரசிக்க
ஆரம்பித்தேன்