Friday 29 October, 2010

அடையாளம்





இலக்கிய சிறப்பிதழில்
ரசிக்க தகுந்த
கவிதை எழுதியிருந்த
கவிஞனின் பெயர்
அவனெழுதிய குத்து பாட்டை
அடை மொழியாய் கொண்டே
அறிவிக்கப்பட்டிருந்தது.

Saturday 2 October, 2010

மோனலிசா



உன்னை மட்டும்
உள் விளையாட்டு தோழியாய் 
கொண்டிருந்த,   
நம் மகன்
தனக்குள் பேசிய படி
தொடரும்
தனிமை விளையாட்டு
கண்டு,
உன் பிரிவின் வெறுமை 
கொன்றொழிக்க முடியாது ,
தவிக்கும் என் 
வெறித்த விழிகளில்
தெறிக்கும் நீர் வழி
பார்க்கும் பொழுதெல்லாம்
உணர்கிறேன் 
புன்னகைத்தே நீயிருக்கும்
புகைப்படத்திலும்,
எங்களை பிரிந்து 
நீயும்  கொண்ட 
மென்சோகத்தை.

திருமதி. சுபாசுரேஷ்
16.12.1977 --  29.05.2010