Sunday 29 May, 2016

நினைவேந்தல்

என்  அன்பே ,

நீண்டு கொண்டே இருக்கின்றன
நீயில்லா  பொழுதுகள்

உனக்காய் வாழாமல் ,
என் உயிராய் வாழ்ந்தாய்
பின் ஏன் உயிர் பிரிந்தாய்

நீ இருந்து இருக்கலாம் என்னோடு
இல்லை
நான் இறந்து இருக்கலாம் உன்னோடு

இன்றி
இதயம் நொறுங்கி
உருகி கரையுது
என் உயிர்

உன்னை வந்தடையும்  நாள் நோக்கி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உனக்காய் , என்னிடம்
இன்னும் மிச்சமிருக்கும்
காதலும் , கண்ணீருடனும்