Friday 26 February, 2010

ஆதாம் கேலி

மின் தொடர் வண்டி நெரிசல்
விலக்கி,
இறங்கி போகும் பெண்கள் ,

ஆண் கூட்ட அக்குள் வாடையை
அருவருப்பாய் மூக்கை மூடி
அம்பலப்படுத்தி போவதும் ,

பாலியல் வன்மமாய்தான்
படுகிறது எனக்கு.

Wednesday 10 February, 2010

நாங்களும் (காதல்) ரௌடிதான்














காதலர் தினம் வரதுனால , இங்க , யூத்துகளும், யூத்து , யூத்துனு சொல்லிக்கிற பெர்சுகளும் காதல் கவிதை எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு , தூள் கிளப்ப தயார இருக்குற , இந்த நேரத்துல , நாமளும் ரௌடி தான்னு ப்ரூப் பண்ண வேண்டிய கட்டாயத்தால , குளத்துல .. சாரி , களத்துல குதித்தாச்சு.

இனி ..... ஒரு காதல் அனுபவத்திற்கு தயாராகுங்கள் ...........

உயிர்த்தெழ, மீண்டும்
வேண்டும்
தேவதை.
******
தேவதைகள் காற்றில்
மிதந்துதான் வருவார்களாம்.
காதில் கேட்ட செய்தி.
நீ நடந்தல்லவா வருகிறாய்
மாறாக,
உன்னை பார்த்ததும்
நானல்லவா
மிதந்து கொண்டேயிருக்கிறேன்
காற்றில் தினமும் .
*********
தினமும்
நீ அலுவலகம் நுழைந்தவுடன்
'ஹாய்' சொல்லும் அழகை காண
அலைகிறது மனசு
பேயாய் .
*********
"பேய்"
ஒரு அழகிக்கு
நான் வைத்த செல்ல பெயர்.
தெரியும் , சொன்னால்
பேசாமல் போவாய்
என்னுடன்.
**********
என்னுடன் பேசும்போதெல்லாம்
ஏதாவது புத்தகம் ஒன்றை
இறுக்கி அணைத்தபடி பேசுகிறாயே,
பரிசோதித்துதான் பாரேன்
புத்தகங்களை விட
நான் மென்மையானவன்.

சொன்னவுடன் ,
பரிசளித்து போனாய்
உன் வெட்கத்தை .
***********
உன் வெட்கத்தை
தயவு செய்து
வீட்டிலேயே விட்டு வா
நீ வெட்கப்படும் அழகை
வேடிக்கை பார்த்து
வேலைகள் ஏதும் நடக்காது
முடங்கிபோகிறதாம்
அலுவலகம் .
*********
அலுவலக வாகனத்தில்
ஜன்னல் ஓரங்களை
தவிர்த்துவிடு நீ.
உன் ஓர விழி வீச்சில்
விபத்துக்கள் நேரலாம்,
உனை தொடரும் எனக்கு.
*********
எனக்கு   பிடித்த  நடிகை  படத்தை 
உன் கம்ப்யூட்டர் டெஸ்க் டாப்பில்
எனக்காய் வைத்திருக்கிறாயே
உனக்காய், நீ ரசிக்கும் நடிகரின் 
படம் , நான் வைத்திருக்கும்
ரகசியம் தெரியுமா , உனக்கு
********
உனக்கு மட்டும் அழகாய்
அமைந்துவிடுகிறது
சோம்பல் முறிப்பு
வேலை முடித்து
********.
வேலை முடித்து
இருக்கை விட்டு
எழ நீ எத்தனிக்கும் போதே
இறந்துபோகிறது என் மனசு.
**********
உயிர்த்தெழ, மீண்டும்.........
......
                          
                 

Sunday 7 February, 2010

ஜீவகாருண்யம்



அரு  பட்டு  அடங்கும்
ஆட்டு குட்டிகளை
அதி  காலையிலே
கசாப்பு கடைக்கு போன காரணத்தால்
காண நேர்ந்தது

மனசு வலிக்க, மாமிசம் மறுத்து
வீடு திரும்பினேன்,

அடுத்த வாரமாவது ,
அறுத்த பின்னே சென்று
அசைவம் வாங்க வேண்டுமென்று.

புலிகளை காப்போம்


இந்தியராகிய நமக்கெல்லாம் மிக பெரிய பொறுப்பு , கடமை காத்திருக்கிறது.


வீரத்தின் அடையாளமாக அறியப்பட்ட புலியினம் , சுயநல சூழ்ச்சிகாரர்களால் முற்றிலும் அழித்தொழிக்கபட்டிருக்கிறது


தற்போதைய கணக்கின் படி சுமார் 1411 புலிகள் மட்டுமே ஜீவித்திருப்பதாக அறிவிக்கபட்டுருக்கிறது. இன்னும் உலகம் முழுதும் பரவி கிடக்கும் புலி கணக்கு வெளி வர நாளாகும்.


வெள்ளை புலி , கரும் புலி என்று அனைத்தையும் ஒன்றிணைத்து அவைகளின் இனம் வாழ, வளர நாம் உதவ வேண்டும் .


இந்நிலையில் , தமிழர்கள் ஆகிய நாம் எல்லாரும் ஒன்று பட்டு புலி இனம்காக்க சபதம் ஏற்போம் .


டிஸ்கி : மேலே சொல்லப்பட்ட செய்தியை அரசியல் கண்ணோட்டத்தில் படித்து விட்டு , தவறாக அர்த்தம் கொண்டால் , கம்பனி பொறுப்பாகாது.