Tuesday 30 March, 2010

காத்திருந்த ( வேலை) வேளை

நேர்முக தேர்வு காத்திருப்பில்
கவனம் சிதைத்த கன்னியிடம்
இயல்பாய் இருப்பதுபோல்
காட்டிக்கொள்ள ,

அவள் பெயர் தெரிந்துகொள்ளாமலும்
என் பெயர் தெரியப்படுத்தாமலும்
எதேதோ பேசி, பேசி
கடந்தேன்
பொழுதையும் , சலனத்தையும்.


டிஸ்கி :
1. இது ஒரு தி.மு.க ( அதாவது எனது கடமை, கண்ணியம்
கட்டுப்பாடு பற்றிய அல்லது திருமணத்துக்கு முந்திய
விதை என பொருள் கொள்ளவும்).
 ஹீ .. ஹீ . ஹீ

Thursday 25 March, 2010

எப்பொருள் யார் , யார் வாய் கேட்பினும்.......

ஒரு மகனுக்கு தந்தை செய்யும் முக்கிய கடமை , திருமணம் செய்து வைப்பதுதான் . அந்த வகையில் நானும் , எனது மனைவியும் சேர்ந்து ஒரு நல்ல பெண்ணை( அனுஷா), துரைக்ககாத் தேர்ந்தெடுத்தோம் . துரையிடம் கேட்டு அவருக்கு பிடித்து, அதன் பின்பு தற்போது நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது" ----- 28.03.2010 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ஒரு பேட்டியில் தனது மகனின் திருமணம் பற்றிய கேள்விக்கு திரு. அழகிரி அவர்களின் பதில்.

"அனுஷாவுக்கும் , எனக்கும் ரெண்டு வருஷ காதல். யாருக்கும் தெரியாம நாங்க காதலிச்ச அவஸ்தை இருக்கே"- 31.03.2010 தேதியிட்ட குமுதம் இதழில் தன் காதல் அனுபவம் பற்றி திரு. துரை தயாநிதி.

மேலும் அந்த கட்டுரை, "அப்பாவோட துணிச்சலில் ஐந்தில் ஒரு பங்காவது பையனுக்கு இருக்காதா என்ன. பிடிச்ச பெண்ணுக்கு நூறு முறை ஐ லவ் யு சொல்லி, அம்மாவையும் , அப்பாவையும் அந்த காதலுக்கு கன்வின்ஸ் பண்ணி தன் காதலை நிறைவேற்றிகொண்டார் அஞ்சா நெஞ்சன் அழகிரியின் புதல்வர் துரை தயாநிதி" என்று துரை தயாநிதியின் காதல் கதையை கட்டுரையாக்கிருக்கிறது.

பத்திரிக்கை மற்றும் வார இதழ்களில் வரும் செய்திகளில் காணப்படும் பொருள் முரண் பற்றி விளக்கவே , இந்த செய்தி சுட்டி காட்டப்பட்டுள்ளது.
இதில் பேட்டி கொடுத்தவர்கள் முரணனான செய்திகளை சொன்னார்களா , அல்லது சம்பந்த பட்ட வார இதழ்கள் தங்களது கற்பனை கலந்து செய்தியை தந்தார்களா என்று தெரியவில்லை.

தமிழ் நாட்டில் பிரபலமான ஒரு குடும்பத்தை பற்றிய செய்தியிலேயே பொருள் முரணுடன் செய்தி வருகிறது என்றால் , மற்ற செய்திகளின் நிலைமையை எவ்வாறு மதிப்பிடு செய்வது.

போகட்டும் , உண்மை தெரிந்தவுடன் சம்பந்த பட்ட இதழ்கள் , அதை பற்றிய திருத்தமோ அல்லது தவறுக்கு வருத்தமோ தெரிவிக்க போவதில்லை . ( அவர்களுக்கு தெரியும் , இதல்லாம் யார் கவனிக்க போறாங்க , இதை விட முக்கியமா கவலைப்பட , நிறைய விசயங்கள் இருக்குல்ல , செல்லம்மா ஹோட்டல் நல்ல நடக்குதா, திருமதி. செல்வத்துக்கு குழந்தை பொறக்குமா, பொறகதான்னு .)

மேற்படி , திரு. துரை தயாநிதி(காதல் ) திருமண நிச்சயதார்த்த செய்தியின் பொருள் முரண் காரணமாக தமிழகத்தின் பொருளாதாரம் தடுமாறப்போவதில்லை என்றாலும் , தினமும் காலையில் உலக அறிவை வளர்த்துகொள்வதற்காக காசு கொடுத்து தின பத்திரிகை , வார இதழ்களை வாங்கும் அப்பாவிகளை (என்னை போன்ற ) நினைக்கும் போது தோன்றிய கவலையில் தான் இந்த பதிவு

இதை போலத்தான் ஒரு மாதத்திற்கு முன் , ஜூனியர் விகடனில், ஜாமீன் கிடைத்தவுடன் காஞ்சிபுரம் குருக்கள் தான் செய்த தவறுக்கு வெட்கப்படுவதாகவும், இனி இதை போன்ற செயல்களை கனவில் கூட நினைக்க போவதில்லை என்று தனது வக்கிலிடம் சொல்லி அழுததாக ஒரு கட்டுரையில் செய்தி.

அதே வாரத்தில் வந்த நக்கீரனில் , ஜாமீன் கிடைத்தவுடன் காஞ்சிபுரம் குருக்கள் , தான் செய்தது ஒன்றும் பெரிய தவறில்லை என்றும் இன்னும் பல காம களியாட்டங்களை தான் அரங்கேற்றும்முன் போலீஸ் தன்னை பிடித்து விட்டதை எண்ணி வருத்த படுவதாகவும் தென வெட்டாக போட்டி அளித்தது போலவும் செய்தி.

இவைகளை பார்க்கும் பொழுது பத்திரிக்கை துறையின் மீதும் , அவை தரும் செய்திகளின் நம்பக தன்மை மீதும் சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

பத்திரிக்கை தர்மம் என்ற ஒன்றை இனியாவது கடைபிடித்து,பாவப்பட்ட வாசகனின் பார்வைக்கு உண்மை செய்திகளை தர பத்திரிக்கை உலகம் இனியாவது முயற்சி செய்யட்டும் .