Wednesday 22 November, 2017

ஒரு கடவுள் மறுப்பாளனின் கடைசி கவிதை ..........











அற்புதம் ஏதும் நிகழாமலே
அனேகரது
ஆயுள் முடிந்து போகிறது

 இயலாமை அறிந்தும்
இன்னும் ஆண்டவன்
அற்புதம் நிகழப்பண்ணுவேன் என
அரற்றிக்கொண்டேயிருக்கிறான்

அடங்காது ஆன்மீகம் .......

விடாது கருப்பு .............

Wednesday 1 November, 2017

#மழைக்காலம்#




குதுாகலத்தில்,
பள்ளி குழந்தைகளும்...
பரணியில் கிடந்த குடைகளும்........

#மழைக்காலம்#
---------------------------

மறுகி நடக்கும் மான்கள் போல்
மழை கோட்டணிந்த மழலைகள்.....

#மழைக்காலம்#
--------------------------------

தேவ தூதர்கள்தான்
மழை நேர தேநீர் சேவை
மறுக்காமல் செய்பவர் எல்லாம்

#மழைக்காலம்#
 ----------------------------

அரசு எந்திரத்தை அர்சிக்க
ஆண்டுக்கொருமுறை
அனைவர்க்கும் அமையும் சந்தர்ப்பம்......

#மழைக்காலம்#
----------------------------------------

மறைத்த, மறந்த, ஏதேனும்
ஓர் நிகழ்வை
நிச்சயமாய் நினைக்கலாம்
மழைக்கால மனசு .....

#மழைக்காலம்#
----------------------------------