Monday 1 April, 2013

நீதானே எந்தன் .....................













காதல் மறுத்தாய்

தோழா என்றழைத்தவளை 
காதலிப்பாய  - என்று
கட்டாயப்படுத்தியது
காதல்  தீவிரவாதம் தான்
 
மன்னித்தாய்

நட்பு  மட்டுமே
நமக்குள்  என்றும்
என்றாய் .

இயல்பாய்  சிரித்து,

வற்புறுத்திய பொழுதை விட
வருந்திய பொழுது
அழகாய்  தெரிந்தேன் என்றாய்

 நீ கூடத்தான்,

மறுத்தபொழுதை விட
மன்னித்தபொழுது
அழகாய் தெரிந்தாய்

உன் மன்னிப்பை
மனசுக்குள்
மறைத்து  வைக்கிறேன்
மயிலிறகாய் .