Sunday 31 December, 2017
Monday 25 December, 2017
காதல் காலங்களில்
கண்
மூடி இருக்கையில்
எல்லாம்
ஏதாவது
ஒரு கவிதையை
கற்றுக்கொடுக்கிறது
உன் காதல்
சகலமும்
செய்தும்
சமாளிக்க
முடிவதில்லை
காதல்
காலங்களில்
சொன்ன
சாகா
பொய்கள்
என்
நினைவிலிக்கிறது
காதல்
காலங்களில்
எழுந்து
போ, எழுந்து போ
என போலியாய்
எரிந்து
விழுவாய்
அசையாது
அமர்ந்தபடியும் ,
என்
விரல்களை விடாத படியும்
மறுக்க
மாட்டாய்
காதல்
காலங்களில்
மறந்து
போ மறந்து போ
என மறுபடி மறுபடி
சொல்லியே
என்
மனசுக்குள் வந்ததை
இன்றும்
நம் காதல் சாலைகளை
கடக்கையில்
பார்க்கிறேன்
காதல்
காலங்களில்
நாம்
விட்டு வந்த
வெட்கப்பூக்கள்
விளைந்து கிடப்பதை
அழியாமல்
இருக்கிறது
ஆப்டர்
மேரேஜிலும்
நம்
காதல் கால
அரோமா
# உயிர் சாலை #
அலறிப்பாயும்
ஆம்புலன்ஸ்
ஏதும்
எனை கடக்காமல்
அலுவலகம்
அடைவதில்லை
நான்
அநேக நாள்
# உயிர்
சாலை #
*******************
வெறி
கொண்ட வேகம் கொண்டு
எனை
முந்தி செல்லும்
எல்லா
வாகனமும்
விபத்தின்றி
வீடு போய்
சேரவேண்டும் என்று வேண்டும்
நல்லோன்
தான் நானும்
நம்புங்கள்
# உயிர்
சாலை #
பெரும்பாலான
பெண்கள்
“ Break “ என்ற
ஒன்றை பற்றி அதிகம்
அலட்டிக்கொள்வதில்லை
போலும்
அவர்தம்
காட்டும்
காதலிலும்
ஓட்டும் வண்டியிலும்
# உயிர் சாலை #
#பாரதி போல்#
மாநிலம்
கடப்பேன் என்கிறார்கள் மக்கள்
நாடு
கடப்பேன் என்கிறார்கள் நடிகர்கள்
அறிவிப்பின்றி
அடிக்கடி
அண்டம்
கடக்கிறார்கள் அரசியல்வாதிகள்
கடுப்பேறிய
எனை போன்ற
காமன்மேன்
என் செய்ய ?
பெருங்கோபம்
பொறுத்து
போலி
பேராண்மை பேணி
காலம்
கடத்துவதன்றி
#பாரதி
போல்#
பாரதி
போற்ற
போல்
வேடமணிவர்
வேடிக்கை
மனிதர்கள்
பாடல்
சொல்லி பதிவர்
பாரதியை
படித்தவர்கள்
என்
போல் ரௌத்திரம்
பழகியவர்கள்
பாரதி
போல்
ஒரு
பாடல் வரியாவது
படைக்க
படாது பாடுபடுகின்றனர்
#பாரதி
போல்#
சமகால சூழலில் ,
பாரதியை படித்திருக்கிறேன்
என்பதை கூட சற்று பயத்துடன் தான்
சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது
கருத்து Courtesy : “ Laxmi “
Saturday 2 December, 2017
Subscribe to:
Posts (Atom)