Sunday 31 December, 2017

Old year -New Year



ஏதேதோ செய்தும்
Impress  செய்ய முடியாமல்
நான் தவிக்க
ஏதுமே செய்யாது
எல்லோரையும்
எப்படி Impress செய்கிறாய்

தொடங்கும் ஆண்டிடம்
முடிகின்ற ஆண்டு
முணு முணுக்கிறது

Monday 25 December, 2017

காதல் காலங்களில்




கண் மூடி இருக்கையில்
எல்லாம்
ஏதாவது ஒரு கவிதையை
கற்றுக்கொடுக்கிறது
 உன் காதல்
 ***************
சகலமும் செய்தும்
சமாளிக்க முடிவதில்லை
காதல் காலங்களில்
சொன்ன  சாகா பொய்கள்
 ******************
என் நினைவிலிக்கிறது
காதல் காலங்களில்
எழுந்து போ, எழுந்து போ
என போலியாய்
எரிந்து விழுவாய்
அசையாது அமர்ந்தபடியும் ,
என் விரல்களை விடாத படியும்  
 ********************
மறுக்க மாட்டாய்
காதல் காலங்களில்
மறந்து போ மறந்து போ
என மறுபடி மறுபடி
சொல்லியே
என் மனசுக்குள் வந்ததை  
 *********************
இன்றும்
 நம் காதல் சாலைகளை கடக்கையில்
பார்க்கிறேன்
காதல் காலங்களில்
நாம் விட்டு வந்த   
வெட்கப்பூக்கள் விளைந்து கிடப்பதை
 ***********************
 உன் அன்பால்  
அழியாமல் இருக்கிறது
ஆப்டர் மேரேஜிலும்
நம் காதல் கால
அரோமா





DEC 6















பாவி மனிதா
பாவம் பாபரும் , ராமரும்
பத்திரமாய் இருக்கும்படி
பரஸ்பரம் தேற்றிக்கொண்டு
பயந்தபடியே தான் கடக்கிறார்கள்
பலகாலமாய் 
இருவரும் இந்நாளை

சமத்துவம்










சாமானியனை போலவே
சலுகைகள்
ஏதும் கிடைப்பதில்லை
சாலை விரிவாக்கத்தில்
சாலை ஓர  கோவில் சாமிகளுக்கும்


குழந்தையாய்









# உயிர் சாலை #



அலறிப்பாயும் ஆம்புலன்ஸ்
ஏதும் எனை கடக்காமல்
அலுவலகம் அடைவதில்லை
நான் அநேக நாள்

# உயிர் சாலை #

*******************

வெறி கொண்ட வேகம் கொண்டு
எனை முந்தி செல்லும்
எல்லா வாகனமும்
விபத்தின்றி வீடு போய்
 சேரவேண்டும் என்று வேண்டும்  
நல்லோன்  தான்  நானும் 
நம்புங்கள்

# உயிர் சாலை #
*************************

பெரும்பாலான பெண்கள்  
“ Break “ என்ற ஒன்றை பற்றி அதிகம்
அலட்டிக்கொள்வதில்லை  போலும்
அவர்தம்
காட்டும் காதலிலும்
 ஓட்டும் வண்டியிலும்

 # உயிர் சாலை #



#பாரதி போல்#
















மாநிலம் கடப்பேன் என்கிறார்கள் மக்கள்
நாடு கடப்பேன் என்கிறார்கள் நடிகர்கள்
அறிவிப்பின்றி அடிக்கடி
அண்டம் கடக்கிறார்கள் அரசியல்வாதிகள்
கடுப்பேறிய எனை போன்ற
காமன்மேன் என் செய்ய ?
பெருங்கோபம் பொறுத்து
போலி பேராண்மை பேணி
காலம் கடத்துவதன்றி

#பாரதி போல்#

 *******************
பாரதி போற்ற

போல் வேடமணிவர்
வேடிக்கை மனிதர்கள்

பாடல் சொல்லி பதிவர்
பாரதியை படித்தவர்கள்

என் போல் ரௌத்திரம்
பழகியவர்கள்

பாரதி போல்
ஒரு பாடல் வரியாவது
படைக்க படாது பாடுபடுகின்றனர்

#பாரதி போல்#

 ********************

சமகால சூழலில் ,
பாரதியை படித்திருக்கிறேன்
என்பதை கூட சற்று பயத்துடன் தான்
சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது

கருத்து Courtesy  : “ Laxmi “

#பாரதி போல்#

***************************

த்ரிஷ்டி





Saturday 2 December, 2017

#மழைக்காலகவிதை#



நனைவது எனக்கு பிடிக்கும்
என்று உனக்கு தெரியும்.

நீ நனைந்து கொண்டிருப்பாய்
என்பது எனக்கு தெரியும்

#மழைக்காலகவிதை#

மனிதசிறகு


என் ஜன்னல் வழி தினம்
எனை நோக்கும்
சிறு பறவையொன்று ,
நான் சிறைப்பட்டிருப்பதாய்  
நினைத்து ,

பறந்து அமர்ந்து, அமர்ந்து  பறந்து
சிறகடிப்பது எப்படியென்று
எனக்கு சிறப்பு வகுப்பு எடுக்கிறது

அந்தோ அது அறியுமா

மனிதர்க்கு சிறகுகள்
அவ்வளவு
சீக்கிரம் வாய்ப்பதில்லையென்று

கலவை