Friday 11 March, 2011

வெள்ளி கிறுக்கல்கள் - 2


புதிய வேதம்

அன்பு சுபா
இப்பொழுதெல்லாம்
உன் பெயரை அழுத்தி
உச்சரித்தே
நல்ல இளைப்பாறுதல்
பெறுகிறேன்.
***************

நீ உயிர்தெழுந்து
வந்துவிடமாட்டாயா
என்ற எதிர்பார்ப்பில்
இருக்கிறேன்
இறந்துகொண்டே.
*******************

நீ என்னை விட்டு
விலகுவதில்லை
பிரிவதுமில்லை.
எனக்குள்ளேயே
இருக்கிறாய்.
****************

பித்துவம்

பகுத்தறியா பயமோ
பக்தியோ
எல்லா கடவுளையும்
பிடிக்கிறது எனக்கு
எந்த கடவுளுக்கும்
எனை பிடிக்கவில்லை
என்பது தெரிந்தும்.
************