Sunday 20 April, 2014

ரசிகன்













"என்னிடம்  எதை நீ
அதிகம் ரசிக்கிறாய்"

ரகசியமாய்  நீ கேட்ட
கேள்விக்கு ,

சொன்னால் கோபிப்பாய்
என்ற என் பதில் கேட்டு,
 
"என்ன அது" - என்று

 நீ

செல்லமாய்  சிணுங்கி
தவித்ததை

ரகசியமாய் ரசிக்க
ஆரம்பித்தேன்.

********************

 நான் ரசிக்கும்படி
 ஏதாவது எழுதித்தாயேன்
 என கொஞ்சினாய்

  தயங்காது எழுதி
 தந்தேன் என் பெயரை.

 நீ அதை ரசித்து வாசிப்பதை

 ரகசியமாய் ரசிக்க
 ஆரம்பித்தேன்

















கவிஞன்














 ஒருகோப்பை  தேநீரும்
 என் கன்னம் தொடும்
 உன்  உள்ளங்கை  சூடும்
 போதும் எனக்கு
  உன்னை மயக்கும்
  ஒரு கவிதை சொல்ல.