கடவுளும் நானும்
காலை நடை பயிற்சியில் இருந்தோம்
நடை பழகிய நாள் முதல்
நண்பர் அவர்.
அவர்தான் ஆரம்பித்தார்
நாம் கொண்ட பந்தயம்
நியாபகம் இருக்கா உனக்கு
அன்று முதல்
கஷ்டம் ஆயிரம் கொடுப்பேன்
கலங்காது வாழ்ந்தால்
அடுத்த பிறவியில்
அதிர்ஷ்டக்காரன் நீ
தோல்வி , கலைந்த கனவு என
கஷ்டம் பல கொடுத்தும்
கலங்காதிருக்கிறாய்
கலங்காதிருக்கிறாய்
இன்னும்
ஒன்று குறை ஆயிரம் கடக்க
அதை முடிக்க முடியுமா உன்னால்
அலட்சியமாய் கேட்டு சிரித்தார் .
கணக்கில் கெட்டி நான் .
கஷ்டங்கள் ஆயிரம் ஆகிப்போனதே
அவசரமாய் சொன்னேன் அவரிடம் .
இல்லை , இல்லை ,
ஏமாற்றுகிறாய் நீ .
ஒப்புக்கொள் உன் தோல்வி என்றார்.
சட்டென்று சொன்னேன்.
சந்தேகம் என்றால்
சகலமும் தொடங்குவோம்
முதலிருந்து. என்று
ஆடி போன ஆண்டவன்
அங்கு வரவில்லை
அடுத்த நாளிலிருந்து