சமம்தான் என்று சம்மதித்த போதும்
மனிதி , இறைவி என்று , ஏன்
மல்லு கட்டுகிறிர்கள்
ஏன் இந்த தீவிரவாதம் ?
பெண்களை போற்றுதல் பொருட்டு
அரக்கர் போல்
ஆண்களை
அடையாள படுத்தாதீர்கள்
ஆணாய் பிறந்ததே அவமானமோ என
ஆண் மனதை அழ செய்யாதீர்கள்
அது கூட ஒரு வகை
பாலியல் வன்மம் தான்
பெண்ணை , பெண்ணாய் மட்டும்
ஆணுக்கு அறிமுக படுத்துங்கள்
சமமாய் சாதிக்க சொல்லுங்கள்