Friday 19 August, 2016

மயில் போல பொண்ணு ஒன்னு - சினிமா பாட்டு

காட்சி : சிறு நகரத்தில் மகளிர் சுய நிதி குழு நடத்தி வசித்து வரும் ஒரு இளம் பெண் , அந்த ஊருக்கு  வரும் ஒரு நகரத்து இளைஞன் மேல் காதல் கொண்டு , நம்பிக்கையுடனும் , சற்று  தயக்கத்தோடும்  இருக்கும் நிலையில் ,  தன்  காதலை எண்ணி பாடும்  பாடல்  . இலக்கிய பாணியில்  இல்லாமல் , இயல்பாய் , எளிய  வார்த்தைகளால் பாடுவது போல்

இனி பாடல் .........

பல்லவி :

உயிர் கொத்தி போனயட , அழகா
உள் மனம் சென்றயடா , தலைவா
கண்ணை மூடியே  நான்
காதலில் நினைத்தேன் உனையே , காதலா  ஆ ஆ ஆ

அனு பல்லவி :

நன்னன்ஆ   ஆ ஆ , நன்னன்ஆ   ஆ ஆ
நா நானா நா நானா  ஆ ஆ  ஆ ஆ


(வயலின் பிட் )

முதல் சரணம் :

சொல்லில் அடங்குமா , உன்  அழகு
மௌனம்  கலைத்தே  நீ மொழி பழகு
நானோ சாயங்கால சென் நிலவு
கள்ளப்பார்வையில்எனை செய்கிறாய்  களவு  உ  உ உ

(புல்லாங்குழல் பிட்)

இரண்டாம் சரணம் :

ஏங்கி தவிக்குதே என்  தேகம்
கடல் ஆழம் தாங்குமா என்  மோகம்
நானே உன் காதலி , அது யோகம்
இல்லையென்றால் தாக்குமே பெரும் சோகம்  ம் ம்  ம் ம்

(வயலின்  &  புல்லாங்குழல் பிட் )

மூன்றாம் சரணம் :

தினம் நீ  எனை  பார்க்கும்   நொடிகள்
பூக்குதே என்னுள்  ரோஜா செடிகள்
நீ  வந்து  எனை  சேரும் பொழுது
உன் மார்பில் சாய்ந்தமர்வேன் சற்று அழுது

( Instrumental Repeat)



வாழ்வில் தொலைந்தவன்

கடைசி ஞாயிறு
கடவுள்  அலுவலகம் சென்றிருந்தேன்

இறைந்து கிடந்தது
எங்கும்
இறந்தவர் , இறக்கப்போகிறவர் பட்டியல்

ஏமாந்தேன் தேடி
இரண்டிலும் இல்லை என்  பெயர்

சாகாவரம் பெற்றவனா நான்
சத்தமாய் கேட்டேன் கடவுளிடம்

கண்ணை மூடியபடி இருந்த கடவுள்
என்   காதில் சொன்னார்

பிறக்கவே இல்லை நீ இன்னும்