Friday 15 January, 2016

கல்யாண காலம்















காதல் மறந்து
காலம்  கடந்தேன்
எனக்கான நீ
எங்கேனும் காத்திருப்பாய்
என்று .

 பெண் பார்க்கும் நாள்.


 உன் முதல் விழி வீச்சில்

 ரசாயன மாற்றம்
நிகழவில்லை ஏதும் 
 என்னுள்

காபி கோப்பை தந்தபடி

கடை கண்ணால் பார்த்தாலும்
களவாடவில்லை , 
நீ
என்  இதயம் .

பிடிச்சிருக்கா ,என்ற

உறவின் கேள்விக்கு
பிடிச்சிருக்கு என சொல்லி
நீ விட்டுசென்ற
வெட்கத்தில் தானடி
வீழ்ந்தேன் நான்.

திருமணங்கள்  சொர்க்கத்தில் தான்

நிச்சயிக்கபடுகின்றனவாம்
நாம் திருமணம்
நிச்சயிக்கபட
நாம் இருந்த இடமே
சொர்கமானது.

திருமண நாளில்

உன் மலர் கழுத்தில்
மங்கள நானின்
முதல் முடிச்சை - " நான் "
இரண்டாம் முடிச்சை - " உன்னை "
மூன்றாம் முடிச்சை --  "காதலிக்கிறேன் "
என சொல்லித்தான்
அணிவித்தேன் .
அறிவாயா  நீ .


அதிர்ஷ்ட காரியடி  நீ , என்று

உன்தோழிகள்
அவசரமாய்  சொல்லி போனதை
கவனித்த நான்,
 என் நண்பர்கள்  
 மச்ச காரண்டா  நீ ,என்றதை
மறைக்க முடியவில்லை
உன்னிடம் .

சொந்தங்கள் கூடி

செய்த பந்தம் , இது
வா தேவதையே
 நீ  என்  சொந்தம் .

காதலித்து பார்க்கவில்லை

காதலிக்க நேரமில்லை
கல்யாணமா  காதலின் எல்லை.
கவலை விடு
அன்பே
ஆதலினால்
இனி  காதல் செய்வோம்

No comments:

Post a Comment

Leave your comments