அவஸ்தை
தான் என்றாலும்
உனக்காய் ஆறு (நாள் )
அமைதியாய் கடக்கிறேன்
ஆனால்
நீ
தொடங்கியதும் முடிவதும்
முழுமையாய்
உணரும்
முன்னே
உதறிப் போகிறாய்
உன் இருப்பை
வருவாய்
திரும்பி என்ற
நம்பிக்கை தான்
உனை
பிரிவதை கூட
வழக்கமாக்கி கொண்டிருக்கிறது
நா
(ன்) இரு
என்றாலும்
இருக்க மாட்டாய்
போய்
வா ..............
ஞாயிறு
No comments:
Post a Comment
Leave your comments