உன்னை மட்டும்
உள் விளையாட்டு தோழியாய்
கொண்டிருந்த,
நம் மகன்
தனக்குள் பேசிய படி
தொடரும்
தனிமை விளையாட்டு
கண்டு,
உன் பிரிவின் வெறுமை
கொன்றொழிக்க முடியாது ,
தவிக்கும் என்
வெறித்த விழிகளில்
தெறிக்கும் நீர் வழி
பார்க்கும் பொழுதெல்லாம்
உணர்கிறேன்
புன்னகைத்தே நீயிருக்கும்
புகைப்படத்திலும்,
எங்களை பிரிந்து
நீயும் கொண்ட
மென்சோகத்தை.
திருமதி. சுபாசுரேஷ்
16.12.1977 -- 29.05.2010
No comments:
Post a Comment
Leave your comments