Wednesday 23 May, 2018

M (A) Y மனசு


சிரித்து கொள்கிறேன்
சிறு வயதில்
அனைத்துக்கும்
அழுதிருந்ததை
நினைத்து
***
நினைத்தபடியே
இருக்கிறேன்
மறப்பது
எப்படியென்று
*****
எப்படியாவது
இறந்து போகலாம்
என நினைக்கும் போதெல்லாம்
பிறந்து விடுகிறேன்
எதையாவது
ரசித்து
*********
ரசித்தபடியே
இருப்பது தான்
வெறுப்பாய்
இருக்கிறது
**************
இருக்கிறது
ஓா் இமய  கனா ,
இறவா  வரிகளை  
எழுதி விட வேண்டும்
இறந்தாலும்  
வாழ்ந்திருக்க 
*****************************


No comments:

Post a Comment

Leave your comments