Wednesday 6 January, 2010

பொய் இலக்கணம்









மழை துளி, மலர் சிதறல்
சுமந்த மறைவான சாலையில்
உன் விரல் உரச நடக்கையில்
உணர்ச்சிவசப்பட்ட என்னை
நாசூக்காய் தவிர்த்து
நடந்து போனாயே
அது
நினைவிருக்கிறது எனக்கு.

காபி கடையில்
அருகமர்திருந்தபொழுது,
உன் தந்தை கண்டு பதறிய
என்னை அமைதியாக்கி
அருகில் அழைத்துபோய்
அறிமுகப்படுத்தினாயே
அது
நினைவிருக்கிறது எனக்கு.

"இந்த புத்தாண்டிலாவது
அச்சம் தவிர்,உரக்க சொல்

 உலகுக்கு உன் காதல்"
 நள்ளிரவில்
குறுஞ்செய்தி கொடுத்தாயே
அது
நினைவிருக்கிறது எனக்கு.

தலை குனிந்து, தாலி வாங்கி
சோக புன்னகையுடன் ,
ஜோடியாய் போனாயே 
 அது
நினைவிருக்கிறது எனக்கு.



இருந்தாலும்,

 வருடம் தோறும்
வாழ்த்து சொல்ல,
உன் திருமண தேதி மட்டும்
என் மனைவி
ஞாபகப்படுத்தும்வரை
நினைவுக்கு வருவதில்லை எனக்கு.

No comments:

Post a Comment

Leave your comments