என்றேனும் வாரக்கடைசி
பெருநகர் அரவமற்ற
வட்ட சாலை
வழிநடக்க,
ஊர் ஞாபகம் உள்ளுக்குள்.
பச்சைவயல் பாதை
நெட்டை மரம்,குட்டைகோயில்
ஆச்சரிய கண்களோடு
அன்பான மக்கள் என்று.
ஊர் போய், உண்டு களைத்து
ஊர் கதை கேட்டு
விட்டம் பார்த்து
விழுந்து கிடக்க,
இதயத்தின் ஓரத்தில்
இன்னிசை போல்
நகரத்து இரைச்சல்
பட பட என நடக்கும்
பட்டாம் பூச்சி பெண்கள்.
இடைவிடாது பேசும்
எப்.எம் குரல்கள்.
பறக்கும் ரயில் பர பரப்பு
பாதையோர சாப்பாடு
மாமு, மச்சிகள்
சபலப்படுத்தும் சமாச்சாரங்கள்.
இரவுகளை காவு வாங்கி
காசு கொடுக்கும்
கம்ப்யூட்டர் கடமைகள்
வழி இன்றி வகுத்த
வாழ்வின்விலாசங்கள்.
இயல்பாய்போகிறது
இந்தஎந்திரவாழ்க்கை
இனிமையாய்
இருப்பதாலும் கூட .
வட்ட சாலை
வழிநடக்க,
ஊர் ஞாபகம் உள்ளுக்குள்.
பச்சைவயல் பாதை
நெட்டை மரம்,குட்டைகோயில்
ஆச்சரிய கண்களோடு
அன்பான மக்கள் என்று.
ஊர் போய், உண்டு களைத்து
ஊர் கதை கேட்டு
விட்டம் பார்த்து
விழுந்து கிடக்க,
இதயத்தின் ஓரத்தில்
இன்னிசை போல்
நகரத்து இரைச்சல்
பட பட என நடக்கும்
பட்டாம் பூச்சி பெண்கள்.
இடைவிடாது பேசும்
எப்.எம் குரல்கள்.
பறக்கும் ரயில் பர பரப்பு
பாதையோர சாப்பாடு
மாமு, மச்சிகள்
சபலப்படுத்தும் சமாச்சாரங்கள்.
இரவுகளை காவு வாங்கி
காசு கொடுக்கும்
கம்ப்யூட்டர் கடமைகள்
வழி இன்றி வகுத்த
வாழ்வின்விலாசங்கள்.
இயல்பாய்போகிறது
இந்தஎந்திரவாழ்க்கை
இனிமையாய்
இருப்பதாலும் கூட .
No comments:
Post a Comment
Leave your comments