Saturday 16 January, 2010

காக்கை சோறு










அமாவாசை பூசை முடித்து
அப்பா காக்கைக்கு
இலை நிறைய வைத்த சோற்றை
எடுத்ததா, இல்லையா
கவலையில்,

வீதி கடக்கும்
பிச்சைக்காரன் குரல்
விழுவதேயில்லை
காதில்.

No comments:

Post a Comment

Leave your comments